பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டியில் அடிப்படை வசதியின்றி உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பாப்பிரெட்டிப்பட்டியில் சார்பதிவாளர் அலுவலகம், சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்த நிலையில், கடந்த 5 வருடங்களாக புதிய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. பட்டா பெயர் மாற்றம், பததிரப்பதிவு என தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால், இங்கு வருபவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.