காளையார்கோவில்: 350 ஆண்டுகள் பழமையான வாமனக்கல் உருவம் பொறித்த கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே கொல்லங்குடி, வீரமுத்துப்பட்டி, செங்குளிவயல் பகுதிகளில் பழக்கால எழுத்துக்கள் பொறித்த கல்வெட்டுகள் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அப்பகுதிகளில் கொல்லங்குடியைச் சேர்ந்த ஆசிரியர் பயிற்றுநரும், தொல்லியல் ஆய்வாளருமான புலவர் காளிராசா ஆய்வு செய்தார்.