பணம் என்ற கிளுகிளுப்பை காட்டி அதிமுக இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது: ஸ்டாலின் பேச்சு

சென்னை: பணம் என்ற கிளுகிளுப்பை காட்டி அதிமுக இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் திருமண விழாவில் கலந்துகொண்ட அவர் பேசியதாவது, ஆட்சியில் உள்ள தவறை சுட்டி காட்டுவது எதிர்க்கட்சி தலைவரின் கடமை, ஆனால் அதற்கு முதலமைச்சர் கோபப்படுகிறார் என குற்றம் சாட்டினார். எதிரிக்கட்சியாக இல்லாமல் எதிர்க்கட்சியாக செயல்படுவேன் என சட்டசபையில் சொன்னேன், அதன்படியே நடக்கிறேன் என்று கூறினார். 2 இடைத்தேர்தலில் ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டு, பணநாயகம் வெற்றி பெற்றுள்ளது, ஆனால் இந்த வெற்றி தொடராது. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற தயாராகுவோம் என அவர் கூறியுள்ளார்.

Related Stories: