புதுடெல்லி: டெல்லி ஐஐடி.க்கு250 கோடி நிதி திரட்டும் முன்னாள் மாணவர்கள் நன்கொடை திட்டத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று தொடங்கி வைத்தார். தாங்கள் படித்த நிறுவனங்களுக்கு முன்னாள் மாணவர்கள் நிதி அளிப்பது உலகளாவிய வழக்கமாக இருந்து வருகிறது. இதில் ஹார்வார்டு, யேல், கொலம்பியா பல்கலைக் கழகங்களுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் முதல் முறையாக, இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து டெல்லி ஐஐடி முன்னாள் மாணவர்கள் நன்கொடை திட்டத்தை தொடங்க முடிவு செய்துள்ளனர்.