சென்னிமலை: சென்னிமலை நகர் பகுதி முழுவதும் உள்ள வீடுகளில் நிலையற்ற மின்சாரம் பாய்வதால் யுபிஎஸ் பயன்படுத்துபவர்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். சென்னிமலை பகுதிகளில் கடந்த 20 நாட்களாக வீடுகளில் பயன்படுத்தும் மின்சாரம் நள்ளிரவு 1 மணியில் இருந்து தொடர்ந்து 240 வோல்ட் அளவை தாண்டி 269 முதல் 270 வோல்ட் வரை வந்துகொண்டிருக்கிறது. இதனால், நள்ளிரவில் மின்சாரத்தில்தான் மின்விசிறி ஓடுகிறதா? மின்விளக்கு எரிகிறதா? அல்லது யுபிஎஸ் பயன்படுகிறதா என யாரும் கவனிப்பதில்லை. வீட்டில் உபயோகப்படுத்தும் யுபிஎஸ்.சில் 240 வோல்ட் மேல் வந்தால் தானாக ஓவர் லோடு ஆகி மின்சாரத்தில் இருந்து மாறி பேட்டரியில் இயங்க ஆரம்பித்துவிடும். இது காலை 4 முதல் 5 மணி வரை நடக்கிறது.