அண்ணாநகர்: கோயம்பேட்டில் கடந்த 2015ம் ஆண்டு 93.5 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை மற்றும் அலுவலக பணிக்கு செல்ல முடியாமல் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கோயம்பேடு மேம்பால பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால் ஆக்கிரமிப்பாளர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.