ஸ்ரீநகர்: இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தார். காஷ்மீர் மாநிலத்தின் இந்திய - பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் அவ்வப்போது பாகிஸ்தான் ராணுவம் எல்லைத் தாண்டி இந்திய நிலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ராணுவமும் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள மச்சாயில் செக்டாரை குறிவைத்து நேற்று இரவு பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது.