நாகர்கோவில்: டாக்டர்கள் ஸ்டிரைக்கால் உரிய சிகிச்சையின்றி குமரியில் நேற்று மூதாட்டி பலியானார். நாகர்கோவில் கிருஷ்ணன்கோவிலை சேர்ந்தவர் சண்முகம் பிள்ளை. இவரது மனைவி பிரசன்னா(75). இவர் குடல்புண் நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த 17ம் தேதி வயிற்று வலி அதிகமானதை தொடர்ந்து பிரசன்னாவை ஆசாரிபள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், பிரசன்னா நேற்று காலை இறந்தார். பயிற்சி டாக்டர்களை கொண்டு சிகிச்சை அளித்ததால்தான் பிரசன்னா இறந்தார் என பிரசன்னாவின் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.