லாரி கண்ணாடியை உடைத்த 3 போதை வாலிபர்கள் கைது

பெரம்பூர்: வியாசர்பாடி மூர்த்திங்கர் தெருவில் குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் உள்ளே குடிநீர் வாரிய ஒப்பந்த லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் தீபாவளி 6 இளைஞர்கள், திடீரென  குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின்  கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கி உடைத்தனர். இதுகுறித்து லாரி உரிமையாளர் சேதுராமன் எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார், அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், அதே பகுதியை சேர்ந்தவர்கள் லாரி கண்ணாடியை உடைத்தது தெரிந்தது. இவர்களில், வியாசர்பாடி மூர்த்திங்கர்  தெருவை சேர்ந்த சஞ்சய் (18), அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரன் (22), சஞ்சய் நகர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (28) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக  உள்ள மூன்று பேரை தேடி வருகின்றனர்.

Related Stories: