பெரம்பூர்: வியாசர்பாடி மூர்த்திங்கர் தெருவில் குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் உள்ளே குடிநீர் வாரிய ஒப்பந்த லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் தீபாவளி 6 இளைஞர்கள், திடீரென குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கி உடைத்தனர். இதுகுறித்து லாரி உரிமையாளர் சேதுராமன் எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.