கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மாதாபுரத்தைச்சேர்ந்த ஏசுதாஸ் மகன் சின்னப்பன்(53). இவர் சாத்தூர் பகுதியில் உள்ள ஒரு எண்ணெய் மில்லில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். நேற்று தீபாவளி பண்டிகை என்பதால் பொருட்கள் வாங்க கோவில்பட்டிக்கு பஸ்சில் வந்தார். அதன்பிறகு ஊர் திரும்ப பஸ்சை பிடிக்க பஸ் நிலையம் நோக்கி நடந்து வந்தார். மெயின் ரோட்டில் வரும்போது திடீரென்று மயங்கி விழுந்து விட்டார். இதில் முகத்தில் காயம் ஏற்பட்ட அவர் சிறிது நேரத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அய்யப்பன் விசாரணை நடத்தினார்.தீபாவளி பண்டிகை என்பதால் உடனடியாக அவரது உடல் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சின்னப்பன் உடலை ருக்கு கொண்டுவந்து வீட்டில் குளிர்பதன பெட்டியில் வைத்திருந்தனர்.