டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் பாகிஸ்தான் எல்லையை பயன்படுத்த அந்நாடு தடை விதித்துள்ளது. வளைகுடா நாடான, சவுதி அரேபிய மன்னரின் அழைப்பை ஏற்று, சர்வதேச தொழில் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை சவுதி அரேபியா பயணம் செய்கிறார். நாளை சவுதியில் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்துக் கொள்வதோடு அந்நாட்டின் முக்கிய தலைவர்களான சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துலாசிஸ் அல்சாத் மற்றும் இளவரசர் முகமது பின் சல்மான் அல்சாத்தையும் நரேந்திர மோடி சந்தித்து பேச இருக்கிறார். கடந்த மூன்றரை ஆண்டுகளில், இரண்டாவது முறையாக, பிரதமர் மோடி சவுதி அரேபியா செல்கிறார். இந்நிலையில் பிரதமர் மோடி ஐரோப்பிய பயணத்திற்கு தனது வான் எல்லையை பயன்படுத்த பாகிஸ்தான் வழக்கம் போல் தற்பொழுதும் தடை விதித்துள்ளது.