மணப்பாறை: ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நல்ல நோக்கத்துடன் மீட்பு பணிகள் நடைபெற்றாலும் ஒருசில தாமதங்கள் காரணமாக குழந்தையை மீட்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கரூர் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடே தீபாவளி பண்டிகையை கொண்டாடும் இந்த நேரத்தில் தமிழகமெங்கும் சுர்ஜித்தை மீட்க போராடி வருவதாக தெரிவித்துள்ளார். தமிழகமெங்கும் உள்ள மக்கள் அனைவரும் சுர்ஜித் நலமுடன் மீண்டுவர பிரார்த்தனைகளும், ஆயிரக்கணக்கான மக்கள் சம்பவ இடத்திற்கு வருகின்ற ஒரு நெகிழ்ச்சியான சூழ்நிலையில் தாம் உள்ளதாக தெரிவித்துள்ளார். மீட்பு நடவடிக்கையை பொறுத்தவரையில் பெரிய முன்னேற்றம் இன்றி நடைபெற்று வருவதாகவும், பாறையானது கடினமாக இருப்பதால் துளையிட தாமதமாவதாகவும் தெரிவித்துள்ளார்.