திருச்சி: ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட தமிழகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித்தை மீட்கும் பணி 48 மணி நேரமாக தொடர்கிறது. குழந்தை விழுந்துள்ள ஆழ்துளை கிணறு அருகே புதிதாக குழிதோண்டி குழந்தையை மீட்க நடவடிக்கையில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். கையில் சுருக்கு போட்டும், ரோபோ இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு வகையில் குழந்தையை மீட்க முயற்சிக்கப்பட்டது. இதனிடையே குழந்தை சுர்ஜித் மீட்பு பணிக்காக அதிக திறன்கொண்ட இரண்டாம் ரிக் இயந்திரம் நடுக்காட்டுப்பட்டிக்கு வந்தது. சுர்ஜித்தை மீட்க ராமநாதபுரத்தில் இருந்து அதிக திறன்கொண்ட ரிக் இயந்திரம் கொண்டு வரப்பட்டது. குழந்தை விழுந்துள்ள ஆழ்துளை கிணறு அருகே புதிதாக குழித்தோண்டி குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.