சென்னை: டிடிவி.தினகரனை ஒருபோதும் சசிகலா நம்ப மாட்டார் என தினகரன் அதிருப்தியாளர் பெங்களூர் புகழேந்தி தெரிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை புகழேந்தி நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். எனவே, அவர் மீண்டும் அதிமுகவிற்கே செல்ல உள்ளதாக கூறப்பட்டது. இந்தநிலையில், சிறையில் உள்ள சசிகலாவை விரைவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும், சசிகலா இனி டிடிவி.தினகரனை நம்பமாட்டார் எனவும் புகழேந்தி தெரிவித்துள்ளார்.