மகளும், பேரனும் சொத்தை பறித்து கொண்டு அடிச்சு விரட்டிட்டாங்க

* மூதாட்டி புகார்

திண்டுக்கல் : மகளும், பேரனும் சொத்தை பறித்து கொண்டு வீட்டை விட்டு அடிச்சு விரட்டி விட்டதாக கூறி திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி புகார் மனு அளித்தார். திண்டுக்கல் தாமரைப்பாடி ஊராட்சி, கல்லாத்துப்பட்டியை சேர்ந்தவர் கித்திரியம்மாள் (74). இவர் திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு அளித்தார்.

அந்த மனுவில், ‘எனது மகள் சிறுமணியம்மாள், அவரது மகன் சேசு ஆரோக்கியம் ஆகியோர் எனக்கு ஆதரவாக இருந்து கடைசி காலம் வரை உணவு, உடை, உறைவிடம் மற்றும் மருத்துவ பராமரிப்பு செலவுகளை பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி, எனது சொத்துக்களை வாங்கி கொண்டு என்னை பராமரிக்காமல் அடித்து வீட்டை விட்டு துரத்தி விட்டனர். தற்போது என்னை பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாக்கி உள்ளனர். நான் சோத்துக்கே வழியில்லாமல் நடுத்தெருவில் நிற்கிறேன். அதனால் எனது மகள், அவரது மகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

Related Stories: