சென்னை: நட்சத்திர ஓட்டல் அறையில் போதையில் இருந்த கேரள இளம் பெண்ணை கட்டிலில் தள்ளி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த ஓட்டல் ஊழியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆழ்வார்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர் இந்துமதி (29, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், ஆன்லைன் மார்க்கெட்டிங் செய்து வருகிறார். அலுவலக வேலையாக கடந்த 22ம் தேதி சென்னை வந்த இந்துமதி, ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கினார்.ேநற்று முன்தினம் இரவு அறையில் இந்துமதி மது அருந்திவிட்டு போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, ஓட்டல் ரூம் சர்வீஸ் ஊழியரை அழைத்து வேலை வாங்கி உள்ளார். வேலை முடிந்த உடன் ஓட்டல் ஊழியர் அறையில் உள்ள ஜன்னல் கதவுகளை மூடிவிட்டு, போதையில் தனியாக இருந்த இந்துமதியை கட்டிலில் தள்ளி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.