தண்டையார்பேட்டை: எழும்பூரை சேர்ந்த சந்தோஷ் என்ற குமாஸ்தா (30), அதே பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவர், நேற்று முன்தினம் மாலை சவுகார்பேட்டையில் இருந்து தனது கடைக்கு தேவையான நகைகளை வாங்கிக்கொண்டு, பைக்கில் புறப்பட்டார். அப்போது, 8 பேர் கும்பல் அவரை வழிமறித்து, சரமாரியாக அடித்து உதைத்து, நகைகளை பிடுங்கினர். இதனால், அவர் அலறி கூச்சலிட்டார். அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த யானைகவுனி போலீசார் அங்கு வந்து, 7 பேரை மடக்கி பிடித்தனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.