சென்னை: சென்னையை சேர்ந்தவர் பப்புராஜ். தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில், பப்புராஜ் கடந்த 13.12.2012 அன்று, சென்னையில் இருந்து பாண்டிசேரிக்கு வாகனத்தில், டிரைவருடன் மருந்துகளை எடுத்து சென்றார். ரோசானி காவல் நிலையம் அருகே சென்றபோது, இவர்களது வாகனம், முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில் டிரைவர் மற்றும் பப்புராஜ் இருவரும் பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளனர்.இதனால், கணவரை இழந்த வசந்தகுமாரி, மைனர் குழந்தைகள் 2 பேர் சென்னையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தனர்.