அமிர்தசரஸ்: வரலாற்று சிறப்பு மிக்க கர்தார்பூர் வழித்தடத்தை செயல்படுத்துவது குறித்து இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது. பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவையும், பாகிஸ்தானில் நரோவால் மாவட்டத்தில் ரவி நதிக்கரையில் அமைந்துள்ள தர்பார் சாகிப் குருத்வாராவையும் இணைப்பதற்கான கர்தார்பூர் வழித்தடத்தை அமைக்க, இந்தியா-பாகிஸ்தான் அரசுகள் கடந்தாண்டு நவம்பரில் ஒப்புக் கொண்டன. அதன்படி, இந்த வழித்தடம் அமைக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. இதனை தொடர்ந்து வரும் 9ம் தேதி இதற்கான திறப்பு விழா நடைபெற உள்ளது.
கர்தார்பூர் வழித்தட இயக்கம் இந்தியா - பாக் இடையே ஒப்பந்தம் கையெழுத்து
- கர்தார்பூர் பாதை இயக்கம் இந்தியா-பாகிஸ்தான் கையெழுத்திடும் ஒப்பந்தம் இந்தியா
- கர்த்தார்பூர்
- பாக்கிஸ்தான்