ஈரோடு அருகே மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

ஈரோடு: சத்தியமங்கலத்தில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளுக்கு தட்கல் முறையில் இலவச மின்இணைப்பு வழங்க ரூபாய் 1 லட்சம் கேட்டதாக வந்த புகாரினை அடுத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. செயற்பொறியாளர் பிரகாஷிடம் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி கருணாகரன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: