புதுடெல்லி: நடப்பு ஆண்டில் அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி 42 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கச்சா எண்ணெய் தேவை இறக்குமதியை மட்டுமே நம்பியுள்ளது. இதனால், சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றம் செய்கின்றன. ஈரானில் இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வந்தது. ரூபாயில் வாங்குவதால் டாலர் மதிப்பில் ஏற்ற இறக்கங்கள் விலையை பாதிக்கவில்லை. ஆனால், அமெரிக்காவின் தடை காரணமாக ஈரான் கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டது. நாட்டின் மொத்ததேவையில், ஒபெக் கூட்டமைப்பில் அங்கம் வகி்க்கும் மேற்காசிய நாடுகளில் இருந்து 65 சதவீத கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது.