சென்னை: தொமுச உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் பண்டிகை முன்பணம் அறிவிக்கப்பட்டது. அதேபோல் அரசு ஊழியர்களுக்கும் பண்டிகை முன்பணம் அறிவிக்கப்பட்டது. இது அனைத்துத்துறை ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை. ஒரு மாதத்திற்கு முன்பு வழங்க வேண்டும் என்ற ஒப்பந்த சரத்தை அரசோ, போக்குவரத்துக்கழகங்களோ மதிக்கவில்லை.