புதுடெல்லி: மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் 6வது தங்க பத்திரத்தை நேற்று வெளியிட்டது. இதற்கு கிராம் 3,835ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு ஆபரண தங்கம் மீதான மோகத்தை குறைக்கும் வகையிலும், பத்திர வடிவிலான தங்கத்தில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கவும் தங்க பத்திரங்களை மத்திய அரசு அறிமுகம் செய்தது. நடப்பு நிதியாண்டில் இதுவரை 5 பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 6வது தங்க பத்திரம் நேற்று வௌியிடப்பட்டது. இதற்கு கிராம் 3,835 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.