நெல்லை: விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர்நகர் தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தி, அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வன் உள்பட 8 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அதிமுக வேட்பாளர் உள்பட 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதே போல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் மகாராஷ்டிரா, ஹரியானாவில் வாக்குப்பதிவு தொடங்கியது. மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானாவிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜர்நகர் தொகுதி, மகாராஷ்டிரா, ஹரியானாவில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்
- வாக்களிக்கும்
- மகாராஷ்டிரா
- நாங்குநேரி
- விக்கிரவாண்டி
- தொகுதியில்
- புதுச்சேரி காமராஜர்நகர்
- ஹரியானா வாக்களிப்பு
- அரியானா