கோவில்பட்டி: தமிழகத்தில் கால்நடை வாரியம் அமைக்க வேண்டுமென யாதவ மகாசபை தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறினார். தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் கோபாலகிருஷ்ணன் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலாளர் செல்வராஜ், பொருளாளர் எத்திராஜ், இளைஞரணி செயலாளர் வரதராஜன் மற்றும் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் மகாசபை துணைத் தலைவருமான மலேசியா பாண்டியன், தமிழ்நாடு கபடி கழகத்தின் இணைச் செயலாளர் அன்பழகன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், கோவில்பட்டி அருகே கட்டாலங்குளம் மணிமண்டபத்தில் உள்ள அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து லிங்கம்பட்டி கிராமத்தில் மின்சாரம் தாக்கி இறந்த சின்னராஜ் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கினர்.