ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே 80 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரயில் போக்குவரத்தை துவக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.150 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ரயில்வே துறையால் கடந்த 8 மாதங்களில் பல கட்டங்களாக ரயில் போக்குவரத்துக்கான தண்டவாளம், பாலங்கள் அமைப்பது, ரயில் நிலையம் கட்டுமிடம் தொடர்பான நிலம் சர்வே செய்யும் பணி நடத்தப்பட்டது. கடந்த சில நாட்களாக தனுஷ்கோடியில் பழைய ரயில்வே ஸ்டேஷன் இருந்த பகுதியில் பிளாட்பாரங்கள், ரயில் நிலைய கட்டடங்கள் கட்டுவதற்கான நிலத்தடி மணல் ஆய்வு பணி நடந்து வருகிறது. தனுஷ்கோடியில் தேசிய நெடுஞ்சாலைக்கும்,