பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே சரளபதி வனம் அருகே, அகழியை தாண்ட முயற்சித்த காட்டு யானை, தவறி விழுந்து இறந்தது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சேத்துமடை, போத்தமடை, சரளபதி, ஆயிரங்கால்குன்று, சர்க்கார்பதி உள்ளிட்ட வனத்திலிருந்து வெளியேறும் காட்டு யானைகள், அங்கு எல்லைப்பகுதியில் உள்ள அகழியை தாண்டி விவசாய நிலங்களில் ஊடுருவதை வழக்கமாக கொண்டுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில், சுமார் 35வயது மதிக்கத்தக்க ஆண் காட்டுயானை ஒன்று, சரளபதி வனத்திலிலிருந்து வெளியேறியது. அங்குமிங்குமாக உலா வந்த யானை, அப்பகுதியில் சுமார் 5 அடி ஆழம், 10 அடி அகலமுள்ள அகழியை தாண்டி வர முயன்றுள்ளது. ஆனால் அந்த யானை திடீர் என தடுமாறி கீழே விழுந்தது.