புதுடெல்லி: கருத்து வேறுபாடு முற்றி பகுஜன் சமாஜ் கட்சியில் (பிஎஸ்பி) இருந்து பாஜவிற்கு தாவிய சவுத்தரி சுரேந்திர குமார், ரவிதாஸ் கோயில் இடிப்பு விவகாரத்தை அடுத்து, ஆம் ஆத்மி கட்சிக்கு தாவினார்.கடந்த 2008ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பிஎஸ்பி எம்எல்ஏவாக டெல்லியின் கோகுல்புரி தொகுதியில் தேர்வானவர் சவுத்தரி சுரேந்தர் குமார். மூன்று மாதங்களுக்கு முன் அவர் பாஜவில் சேர்ந்தார். அதற்கு முன்பு வரை பிஎஸ்பி மாநில தலைவராகவும் அவர் இருந்தார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஜூலை மாதம் பாஜவில் சேர்ந்த சவுத்தரி, அங்கு 3 மாதம் மட்டுமே நீடித்து, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் ஆம் ஆத்மி கட்சியில் நேற்று இணைந்தார்.