ஈரோடு: ரூ.450 கோடி அளவுக்கு ஜிஈரோடு மாவட்டம் பெருந்துறையை தலைமையிடமாக கொண்ட கட்டமைப்பு நிறுவனம் ‘அன்னை இன்பரா டெவலப்பர்ஸ் லிமிடெட்’. இந்நிறுவனம் நாடு முழுவதும் அரசு ஒப்பந்தங்கள் உட்பட பல கட்டுமான திட்டங்களில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம் விசாகப்பட்டினத்தில் எந்த சேவையும் அளிக்காமல் போலி ரசீதுகளை கொடுத்தும், பெற்றும் சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) மோசடியில் ஈடுபட்டுள்ளதை ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து ஆந்திரா, தெலங்கானா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் அன்னை இன்பரா டெவலப்பர்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்களில், ஜிஎஸ்டி புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.