சிவகங்கை : சிவகங்கையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு மாநாடு மற்றும் விரிவடைந்த மாநிலக்குழு கூட்டம் 2 நாட்கள் நடந்தது. இதில் பங்கேற்க வந்த அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் ஹன்னன்முல்லா கூறுகையில், ‘‘விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டும் நிலைமை தற்போது உள்ளது. இந்தியாவில் இதுவரை 4 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். நாள் ஒன்றுக்கு 52 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் விவசாயிகளின் தற்கொலை சதவீதம் அதிகரித்துக்கொண்டு செல்கிறது.