பவானி: அம்மாபேட்டை அருகே கல் குவாரியில் பாறைகளை உடைக்க வெடி வைத்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் இரு தொழிலாளிகள் உடல் சிதறி பலியாகினர். அம்மாபேட்டை அருகே உள்ள அந்தோணிபுரம் பகுதியில் கல் குவாரி இயங்கி வருகிறது. இக்குவாரியில், நேற்று மாலை தொழிலாளர்கள் செந்தில் (40), சுப்பிரமணியம் (35), ஆறுமுகம் (38) ஆகியோர் பாறைகளைப் பிளக்க வெடி வைத்தனர். சுமார் 200 அடி உயரத்தில் பாறைகளை பிளக்க வெடி மருந்துகளை வைத்துவிட்டு, பாறைகளை வெடிக்க வைக்க தேவையான கம்பிகளை இணைத்துக் கொண்டிருந்தனர். அப்போது, இடி, மின்னலுடன் மழை பெய்ய துவங்கியதால் திடீரென பாறைகளுக்கு வைத்த வெடி வெடித்துச் சிதறியது.