நெல்லை: நாங்குநேரி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் நடேசன் கூறியிருப்பதாவது: இடைத்தேர்தலுக்காக 299 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 688 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 359 கட்டுப்பாட்டு கருவிகள், 404 விவிபேட் இயந்திரங்கள் பெங்களூரு பெல் நிறுவன பொறியாளர்களை கொண்டு முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் முடிக்கப்பட்டு நல்ல நிலையில் உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 26ம் தேதி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ராமையன்பட்டி கிட்டங்கியிலிருந்து நாங்குநேரி இடைத்தேர்தலுக்காக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கவும் 10 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 10 கட்டுப்பாட்டு கருவிகள், 10 வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரங்கள் எடுக்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கருவிகள் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படமாட்டாது.