சேலம் ஆட்டோ டிரைவர் மோகன்ராஜ் 10க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி உல்லாசமாக இருந்தது அம்பலம் : விசாரணையில் திடுக் தகவல்

சேலம் : பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்ததாக கைதான ஆட்டோ டிரைவர், மேலும் 10க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி உல்லாசமாக இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சேலம் அருகே வேம்படிதாளம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ேமாகன்ராஜ், பெண் ஒருவரை மிரட்டி பலாத்காரம் செய்த வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில், மோகன்ராஜ் கைது செய்யப்பட்டார். இவரை 7 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மோகன்ராஜும், அவரது நண்பர் மணிகண்டனும் சேர்ந்து இதுபோன்ற ஏழை பெண்களை மிரட்டி காமவேட்டையாடியுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து மணிகண்டனையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: ஆட்டோ டிரைவர் மோகன்ராஜ், ஏழை பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. அவரது செல்போனை ஆய்வு செய்ததில், இன்னொரு பெண்ணை மிரட்டி, பலாத்காரம் செய்து அதையும் வீடியோவாக பதிவு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த காட்சியை அவரது நெருங்கிய நண்பரான மணிகண்டனிடம் காட்டியுள்ளார். அவர் அதனை பதிவு செய்து அப்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். தொடர்ந்து பெண்களை மிரட்டி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி உல்லாசம் அனுபவித்துள்ளனர். அப்பெண்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்களும் ஒப்புக்கொண்டனர். ஆனால் அவர்களுக்கு குழந்தைகள் இருப்பதால் புகார் கொடுக்க முன்வரவில்லை. போதிய அளவில் விசாரணை நடத்தப்பட்டு விட்டதால் மோகன்ராஜை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளோம். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் ஆட்டோ டிரைவர் மோகன்ராஜை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories: