பண்ருட்டி: பண்ருட்டி அருகே திருவதிகையில் உள்ள பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோயிலில் நேற்று பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதனை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம், மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது. நேற்று மாலை 6 மணி அளவில் மாடவீதியை சுற்றி கிரிவலம் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு 16 முறை மாடவீதியை சுற்றி கிரிவலம் வந்தனர்.