ஒரே நாடு ஒரே மொழி, தேர்தல், ரேஷன், கல்வி என்ற வரிசையில், போக்குவரத்து துறைகளிலும் மத்திய அரசு கைவைக்க தயாராகி விட்டது. ரயில்வேயில் தனியார் மயத்தை புகுத்த தீவிரமாக இறங்கி விட்ட மத்திய அரசு இப்போது மாநிலங்களின் பிடியில் உள்ள போக்குவரத்து கழகங்களையும் படிப்படியாக ஒன்றுமில்லாமல் செய்து விட்டு, தனியார் வசம் போக்குவரத்தை விட சிவப்பு கம்பளம் விரித்து விட்டது. ஐதராபாத், மும்பை, பெங்களூரு, கொல்கத்தா நகரங்களை தொடர்ந்து சென்னைக்கு இப்போது ஆபத்து நெருங்கி விட்டது. போக்குவரத்து கழகங்களை தனியார் வசமாக்க முதல் படியாக மின்சார பஸ்கள் இயக்குவதை தனியாரிடம் விடச்சொல்கிறது மத்திய அரசு. இதற்கு தமிழக அரசும் தலையாட்டி அடுத்த கட்ட நடவடிக்கையில் குதித்து விட்டது.