சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை: நாங்குநேரி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவினர் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மக்கள் விரோத அதிமுக அரசு மீது மக்கள் கடும் கோபத்துடன் இருப்பதால், ஆட்சியாளர்கள் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கட்சியினர் மீது பயன்படுத்தி வருகிறார்கள். நாங்குநேரி தொகுதியில் பிரசாரம் செய்வதற்காக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மூலக்கரைப்பட்டிக்கு வந்த போது அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஒட்டுமொத்தமாக தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்துகிற வகையில் அவரை கிராமத்திற்குள் நுழையக் கூடாது என்று அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.