மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் அக்டோபர் 21ம் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை 24ம் தேதி எண்ணப்படுகிறது. இந்த தேர்தலில் பாஜ.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் சிவசேனா, மொத்தம் 124 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இந்த நிலையில், ேநற்று மும்பை பாந்த்ராவில் உள்ள உத்தவ் தாக்கரேயின் ‘மாதோ’ இல்லத்தில் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: மாநிலம் முழுவதும் சுமார் 1,000 உணவகங்கள் அமைக்கப்பட்டு அவற்றில் 10 ரூபாய்க்கு முழு சாப்பாடு வழங்கப்படும். வீடுகளுக்கான மின்சார கட்டணம் 30 சதவீதம் குறைக்கப்படும். மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகள் கடன் இல்லாத விவசாயிகளாக மாற்றப்படுவார்கள்.