சென்னை: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் மொழிப்பெயர்ப்பாளராக செயல்பட்ட தமிழகர் குறித்து சுவாரஷ்யமான தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று சீன அதிபர் ஜின்பிங் இந்தியாவில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று மதியம் சென்னை வந்தார். மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பின் போது அவர்களுடன் மேலும் 2 பேர் உடனிருந்தனர். அதில் ஒருவர் சீனர், மற்றோருவர் மதுசூதன் ரவீந்திரன் எனும் இந்திய அதிகாரி. ஒரு தலைவர்களுக்குமான மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டு வரும் மதுசூதன் சீன தலைநகர் பெய்ஜிங்கில் இருக்கும் இந்திய தூதரகத்தின் முதன்மை செயலர் ஆவார்.