தானே: தானே ரயில் நிலையத்தில் உள்ள ஒரு ரூபாய் மருத்துவமனையில் இளம்பெண்ணுக்கு சுகப் பிரசவம் நிகழ்ந்துள்ளது. மத்திய ரயில்வே தனது புதிய முயற்சியாக, முக்கிய ரயில் நிலையங்களில் ஒரு ரூபாய் மருத்துவமனையை அறிமுகம் செய்தது. இந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு கட்டணமாக ஒரு ரூபாய் மட்டுமே பெறப்படும். தானே ரயில் நிலையத்தில் உள்ள இதுபோன்ற மருத்துவமனையில் நேற்று இளம்பெண்ணுக்கு சுகப்பிரசவம் நிகழ்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட்டில் உள்ள கர்ஜாத்தில் இருந்து நிறைமாத கர்ப்பிணியான சுபாந்தி பத்ரா, ரயிலில் பயணம் செய்தார். அவர், மும்பை அருகே உள்ள பரேல் பகுதிக்கு செல்ல இருந்தார்.