கோவை: வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.70 லட்சம் மதிப்புள்ள சிகரெட்டுகள் கோவை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. கொழும்பிலிருந்து கோவைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட 23,310 வெளிநாட்டு சிகரெட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சிகரெட்டை கடத்தி வந்த முகமது அக்பர் அலி, அன்சர் அலி, அப்துல் காதர், சாகுல் ஹமீது, காலந்தர் ஹைதர் அலி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.