புதுடெல்லி: குஜராத்தில் இருந்து டெல்லி-ஹரியானா எல்லை வரை 1,400 கி.மீ தூரத்திற்கு பசுமைச்சுவர் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் காற்று மாசுப்பாட்டுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக டெல்லியை சுற்றிலும் மரங்களால் ஆன அரண் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு ஏராளமான மரங்கள் நடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மனித நடவடிக்கைகளால் அழிக்கப்பட்ட காடுகளை மீட்டெடுத்தல் மற்றும் பாலைவனமயமாக்கலை தடுக்க குஜராத் மாநிலத்தின் போர்பந்தர் முதல் ஹரியானா மாநிலத்தின் பானிபட் வரை குஜராத் , ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி இடையே ஆரவல்லி மலைத்தொடர் வழியாக 1,400 கி.மீ தூரத்திற்கும், 5 க.மீ அகலத்திற்கும் மரங்களை வளர்த்து பசுமைச் சுவர் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.