கதுவா: ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டம் அருகே உள்ள ஒரு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் ஹிராநகர் என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில், கடந்த 15 நாட்களாக பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லைக்கு அப்பாலிருந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்றிரவு 10.30 மணி அளவில் துப்பாக்கிகள் மற்றும் சிறிய ரக பீரங்கிகள் மூலம் அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர். இந்த தாக்குதல், 12 மணி நேரம் வரை தொடர்ந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அத்துமீறி தா்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்து வருவதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தான் ராணுவம்: பொதுமக்கள் அச்சம்
- பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதலைத் தொடர்கிறது
- ஜம்மு & காஷ்மீர் கடுவா மாவட்டம்: பொது பயம்
- ஜம்மு
- காஷ்மீர்
- உள்ளூர்
- பாக்கிஸ்தான்
- Hiranagar