நவிமும்பை : நவிமும்பையில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்த காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டுள்ளது. நவிமும்பை கன்சோலியில் வசித்தவர் சாக்ஷி கோலே. இவரது காதலன் தத்தா வாரே(26). இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். ஆரம்பத்தில் இவர்களின் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவர்களின் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இருவருக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற்றது.