அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு 4 பேர் பலி

கன்சாஸ்: அமெரிக்காவில்  துப்பாக்கி கலாச்சாரம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.   துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகளவில் நடக்கின்றன. இதை   கட்டுப்படுத்த முடியாமல், அமெரிக்க அரசு திணறி வருகிறது. இந்நிலையில்,  அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் உள்ள பார் ஒன்றில் நேற்று அதிகாலை 1.30  மணிக்கு உள்ளே நுழைந்த மர்ம நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார்.  இதில், 4 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் காயமடைந்தனர். துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் தப்பி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: