தாம்பரம்: சீன அதிபர் ஜின் பிங் வருகிற 11ம் தேதி தமிழகம் வருகிறார். மாமல்லபுரத்தில் 11 மற்றும் 13ம் தேதிகளில் இந்திய பிரதமர் மோடியை சந்திக்கிறார். இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாமல்லபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விடுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தி, சந்தேகத்திற்கிடமான வகையில் தங்கியுள்ளவர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள விடுதியில் போலீசார் சோதனை செய்தபோது, சேலையூரில் உள்ள கல்லூரியில் படிக்கும் திபெத் நாட்டை சேர்ந்த 2 மாணவர்கள், அதே நாட்டை சேர்ந்த 6 பேருடன் தங்கி இருப்பது தெரிந்தது.