வங்கதேச பிரதமர், சோனியா சந்திப்பு

புதுடெல்லி: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை முன்னாள் பிரதமர் மன்மோகன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் சந்தித்து பேசினார்கள். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இதனை தொடர்ந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் ஷேக் ஹசீனாவை டெல்லியில் நேற்று சந்தித்து பேசினர்.  இருநாட்டு பிரச்னைகள் குறித்து அப்போது விவாதித்தினர். அப்போது, கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

பின்னர், பிரியங்கா காந்தி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘நீண்ட நாட்களாக மீண்டும் சந்திக்க வேண்டும் என நான் காத்திருந்த பிரதமர் ஹசீனா ஜீயை சந்தித்தேன். அவர் என்னை கட்டி தழுவி அன்பை தெரிவித்தார். தனிப்பட்ட இழப்பு மற்றும் கடினமான சூழல்களில் மீண்டு வருதல், துணிச்சலுடன் போராடும் குணம், விடா முயற்சி உள்ளிட்ட அவரின்  தனிகுணநலன்கள் எப்போதும் எனக்கு சிறந்த உத்வேகமாக இருக்கும்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: