புதுடெல்லி: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை முன்னாள் பிரதமர் மன்மோகன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் சந்தித்து பேசினார்கள். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இதனை தொடர்ந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் ஷேக் ஹசீனாவை டெல்லியில் நேற்று சந்தித்து பேசினர். இருநாட்டு பிரச்னைகள் குறித்து அப்போது விவாதித்தினர். அப்போது, கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.