புதுடெல்லி: பங்குச்சந்தையில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 3 வர்த்தக நாட்களிலேயே ₹3,000 கோடியை வெளியேற்றியுள்ளனர். இதுதவிர, கடன் பத்திரங்களில் மேற்கொண்ட ₹977 கோடியையும் வெளியேற்றியுள்ளனர். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கடந்த மாதம் இந்திய பங்குச்சந்தை மற்றும் கடன் பத்திரங்களில் ₹7,850 கோடி முதலீடு செய்துள்ளனர். ஆனால், இந்த மாதம் கடந்த 1ம் தேதி, 3ம் தேதி மற்றும் 4ம் தேதிகளில் பங்குச்சந்தையில் ₹2,947 கோடியை வெளியேற்றியுள்ளனர். கடன் பத்திரங்களில் ₹977 கோடி வெளியேற்றியுள்ளனர். இதன்படி மொத்தம் ₹3,924 முதலீட்டை வாபஸ் பெற்றுள்ளனர்.