திருமலை: ஆந்திராவில் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆளும் கட்சி எம்எல்ஏ உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், நெல்லூர் புறநகர் தொகுதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ.வாக இருப்பவர் கோட்டம்ரெட்டி தர் ரெட்டி. இவரது ஆதரவாளர் ஸ்ரீகாந்த் ரெட்டி. வெங்கடாசலம் மண்டல பரிஷத் மேம்பாட்டு அதிகாரி (எம்பிடிஓ) சரளா. இவர், எம்எல்ஏ.வுக்கு ஆதரவாக செயல்படவில்லை. இதனால், எம்எல்ஏ தர் ரெட்டி மற்றும் அவரது ஆதரவாளர் காந்த் ரெட்டி ஆகியோர் சரளாவிடம், ‘உங்கள் வீட்டின் மின் இணைப்பு, குழாய் இணைப்பு துண்டிக்கப்படும். மேலும், வீட்டின் முன் பள்ளம் தோண்டப்படும்’ என்று மிரட்டியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த சரளா, நெல்லூர் புறநகர் போலீசில் புகார் அளித்தார். ஆனால், போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், அரசு ஊழியர்கள் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் 3 நாட்கள் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.