பவானி: பவானி அருகே ஏரி உடைந்ததால் பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதம் அடைந்தது. ஈரோடு மாவட்டம் பவானி - பெரியபுலியூர் ரோட்டில் மாரப்பம்பாளையம் அருகே சுமார் 2 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. மாரப்பம்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய கனமழை பெய்தது. இதனால், வயல்வெளிகள் நிரம்பி உபர்நீர் ஏரியில் பெருக்கெடுத்து தேங்கியது. ஏரி ஏற்கெனவே நிரம்பியிருந்த நிலையில் மேலும் தண்ணீர் பெருக்கெடுத்து மரம், செடி, கொடிகளை அடித்துக் கொண்டு வந்தது.