இஸ்லாமாபாத்: `காஷ்மீர் மக்களுக்கு உதவும் நோக்கத்துடன் எல்லைப் பகுதியை கடக்க வேண்டாம்’ என்று ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் வாழும் பாகிஸ்தானியர்களை பிரதமர் இம்ரான்கான் எச்சரித்துள்ளார்.காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி நீக்கப்பட்ட பின்னர் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தியா உடனான தூதரக உறவை முறித்து கொண்ட பாகிஸ்தான், இந்திய தூதரை திருப்பி அனுப்பியது. காஷ்மீர் பிரச்னையை சர்வதேச பிரச்னையாக்க பாகிஸ்தான் முயற்சி மேற்கொண்டது. ஆனால், `இது இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை. பாகிஸ்தான் உண்மையை உணர வேண்டும்.